செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி மாணவர்களுக்கு தபால்தலை சேகரிப்பு உதவித்தொகை திட்டம் தொடக்கம்
- இதன் மூலம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
நம்முடைய பழங்கால சின்னங்கள் மாணவர்களின் மனதில் பதிய வேண்டும் என அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகள் எடுத்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில்..திருநெல்வேலி மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை சேகரிப்பை உதவித்தொகை வழங்கும் திட்டம் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் விண்ணப்பதற்கு அனுமதி உண்டு. பள்ளி இறுதி தேர்வில் அவர்கள் 60% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும் .
Philately school club ல் உறுப்பினராக அல்லது philately account வைத்திருப்பவராக இருந்தால் புதிதாக philately account பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 200 ரூபாய் செலுத்தி தொடங்கி கொள்ளலாம்.
இதில் உறுப்பினராக இருக்கும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தில் சேர்ந்து விண்ணப்பிப்பதற்கான அனுமதி உண்டு.
1- 9- 2022 அன்று நடத்தப்படும் போட்டியில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எழுத்து , வினாடி வினா ,என போட்டி வைக்கப்படும் .
கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் www.tamilnadupost.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சவுத் அண்ட ரிலிஜியன் (The post master jenaral south and religion ) மதுரை 625002 என்ற முகவரிக்கு வருகிற 29ஆம் தேதிக்குள் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தபால் தலை சேகரிப்பு என்ற தலைப்பில் செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் 500 ரூபாய் வீதம் ஒரு ஆண்டுக்கு உதவி தொகை இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த தகவலை நெல்லை கோட்டை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இது மட்டும் அல்லாது மேலும் மாணவர்களை முன்னேற்றம் அளிக்கும் வகையில் பல்வேறு விதமான திட்டங்கள் அரசு கொண்டுவர வேண்டும் என்று திருநெல்வேலி டுடே தம்முடைய செய்தியாக தெரிவிக்கின்றது.
Image source: dailythanthi.com