Logo of Tirunelveli Today

6000 ரூபாய் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்

July 7, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி மாணவர்களுக்கு தபால்தலை சேகரிப்பு உதவித்தொகை திட்டம் தொடக்கம்
  • இதன் மூலம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

நம்முடைய பழங்கால சின்னங்கள் மாணவர்களின் மனதில் பதிய வேண்டும் என அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகள் எடுத்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில்..திருநெல்வேலி மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை சேகரிப்பை உதவித்தொகை வழங்கும் திட்டம் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் விண்ணப்பதற்கு அனுமதி உண்டு. பள்ளி இறுதி தேர்வில் அவர்கள் 60% மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும் .

Philately school club ல் உறுப்பினராக அல்லது philately account வைத்திருப்பவராக இருந்தால் புதிதாக philately account பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 200 ரூபாய் செலுத்தி தொடங்கி கொள்ளலாம்.

இதில் உறுப்பினராக இருக்கும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தில் சேர்ந்து விண்ணப்பிப்பதற்கான அனுமதி உண்டு.

1- 9- 2022 அன்று நடத்தப்படும் போட்டியில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எழுத்து , வினாடி வினா ,என போட்டி வைக்கப்படும் .

கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் www.tamilnadupost.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சவுத் அண்ட ரிலிஜியன் (The post master jenaral south and religion ) மதுரை 625002 என்ற முகவரிக்கு வருகிற 29ஆம் தேதிக்குள் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தபால் தலை சேகரிப்பு என்ற தலைப்பில் செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் 500 ரூபாய் வீதம் ஒரு ஆண்டுக்கு உதவி தொகை இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த தகவலை நெல்லை கோட்டை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இது மட்டும் அல்லாது மேலும் மாணவர்களை முன்னேற்றம் அளிக்கும் வகையில் பல்வேறு விதமான திட்டங்கள் அரசு கொண்டுவர வேண்டும் என்று திருநெல்வேலி டுடே தம்முடைய செய்தியாக தெரிவிக்கின்றது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify