Logo of Tirunelveli Today

58 இடங்களில் தாமிரபரணி ஆற்றில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்- கலெக்டர் அறிவிப்பு

June 14, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம்

  • நெல்லை தாமிரபரணி ஆற்றை அசுத்தம் செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குளிநீர் தரத்தை குடிநீராக மாற்றும் திட்டம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் அறிவிப்பு.

மக்கள் அலைவெள்ளம் போல் திரண்டு வந்து பொதிகை மலை உச்சியில் இருந்து கொட்டுகின்ற ஆற்றின் அழகை கண்டு ரசித்து குளித்து மகிழும் பெருமைக்குரிய ஆறாய் தாமிரபரணி புகழ் பெற்று விளங்குகிறது.

பல கோவில்களின் தலத்தீர்த்தம் என நெல்லையில் சிறப்பையும் தாமிரபரணி கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தாமிரபரணி நதியில் வாகனங்களை கழுவுதல், துணிகளைத் துவைத்தல் அசுத்தம் செய்தல் போன்ற செயல்பாடுகள் நடக்கின்றன. இனிமேல் அப்படி செய்தால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ ஆலங்குளம் காட்டு ராமர் கோவில் பகுதியில் இருந்து ஜடாயு தீர்த்தம் நாரணம்மாள்புரம் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் நதிக்கரையில் அடர்ந்துள்ள முட் புதர்களை தூய்மை செய்தல் படித்துறைகளை புனரமைத்தல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நதியில் குளிக்கும் போது ரசாயனம் சோப்பு மக்காத பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அப் பணிகளை பார்வையிட்டார் ஆட்சியர் விஷ்ணு . பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது….

தாமிரபரணி ஆற்றில் 58 இடங்களில் தூய்மைப்பணி நல்ல நீர் வளத்திட்டத்திற்கு நன்கொடையாளர்கள்
தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

தாமிரபரணி நதியின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிநீர் பெற்று வரும் நிலையில்,

நிகழ்ச்சியின் போது பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வன் திருநெல்வேலி வட்டாட்சியர் சண்முகசுந்தரம் நல்லபெருமாள் வித்யாஷங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தாமிரபரணி ஆற்றை புனிதநீராக கருதி பயன்படுத்தி அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் திருநெல்வேலி டுடே சார்பாக மக்களைக் கேட்டுக் கொள்கின்றது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify