Logo of Tirunelveli Today

தேசிய திறனாய்வு தேர்வில் செட்டிகுளம் மாணவர்கள் 34 பேர் வெற்றி

July 4, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை தேசிய திறனாய்வு தேர்வில் செட்டிகுளம் அரசு பள்ளி மாணவர்கள் 34 பேர் வெற்றி பெற்றனர்.
  • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் 4வருடங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை.

மத்திய அரசு ஆண்டுதோறும் திருநெல்வேலி வடக்கன் குளத்தில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி வருகிறது . மாதம் 1000 ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டும் பல்வேறு பள்ளி மாணவர்கள் , நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் பங்கு பெற்றனர். இந்த பங்கேற்பில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 34 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று மாவட்டத்தில் முதல் இடமும், மாநிலத்தில் 2 ஆம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து சாதனை படைக்க காரணமாக இருந்த ஆசிரியை சாந்தினி பொன் குமாரி, தலைமை மற்றும் பயிற்சி ஆசிரியர் ஜேசு ஆகியோரை, பள்ளி மாணவர்களின் பெற்றோர் ,ஆசிரியர்கள் , கழக ஆசிரியர் ஏசுதாசன் இணை செயலர் ரசூல் பொருளாளர் லிங்கதுரை உட்பட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பெற்றோர்களும் பாராட்டி கௌரவித்தனர்.

ஒரு மாணவன் நல்ல திறமையோடு வருவதற்கு பெற்றோர் , ஆசிரியர் சக தோழர்கள் ஊக்குவிப்பு,அறிவாற்றல் அனைத்தும் சிறப்பு அம்சமாக இருக்க வேண்டும்.

எண்ணெய் , திரி, காற்றின் அனுகூலம் இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே ஒரு தீபத்தின் ஒளி சுற்றிலும் சுடர்விட்டு பிரகாசமாய் எரியும். அதுபோல் தான் மாணவ(வி)ர்கள் எனும் அகல் விளக்கில் ஊற்றும் எண்ணையாக பெற்றோர்கள், திரி யாக நல்ல ஆசிரியர் (குரு) இருந்தால் மட்டுமே விளக்கு பிரகாசமாக ஒளி வீசுதல் போன்று , அந்த குழந்தைகளின் அறிவாற்றல் , சாதனை உலகுக்கு தெரியவரும். அதற்கேற்ப அரசும் மாணவ சமுதாயத்திற்காக ஊக்கம் கொடுத்து சலுகைகளை வணங்கி வருவது பாராட்டு கூறியது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify