Logo of Tirunelveli Today

300 லிட்டர் கொள்ளளவு செப்பு பாத்திரத்தில் நெல்லையப்பருக்கு சந்தனாதி தைலம்

June 14, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் சந்தனாதி தைலம் தயார் செய்யும் பணி தொடங்கியது. சந்தனாதி தைலம் என்றால் என்ன என்பது பற்றி அனைவரும் அறிதல் மிக அவசியம்.

சந்தனாதி தைலம் என்பது உடலுக்கு நலம் தரும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பண்டைய தமிழ் நாட்டு சித்தர்களின் அருளால் பேரொளி தரக்கூடிய உடலில் உள்ள தோல்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தும் குளியல் தைலமாகும். அப்படிப்பட்ட அற்புதம் வாய்ந்த சந்தனாதி தைலம் சுவாமி அபிஷேகத்திற்காக நெல்லையப்பர் கோவிலில் செய்ய தொடங்கப்பட்டது.

நெல்லை நகர்ப்புற பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 7- 7- 2021 அன்று ஆய்வு செய்தார். அப்பொழுது நெல்லையப்பர் கோவிலில் சந்தனாதி தைலம் தயார் செய்து சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் என அன்று அறிவித்தார்.

அதன்படி தற்போது சுமார் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட செம்பு பாத்திரத்தில் , சுமார் 44 சக்திவாய்ந்த மூலிகைகள் மற்றும் இதர பொருட்களை கொண்டு சந்தனாதி தைலம் 8 மாத காலங்களில் தயார் செய்ய உத்தேசிக்கபட்டது.

நேற்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் பூஜைகள் செய்யப்பட்டு சந்தனாதித் தைலம் தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா செயல் அலுவலர் ஐயர் சிவமணி கண்காணிப்பாளர் சுப்புலக்ஷ்மியின் முருகேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தெய்வீக சக்தி வாய்ந்த அபூர்வ மூலிகைகள் அடங்கிய சந்தனாதி தைலம் தெய்வத்திற்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு அதன் பின் பக்தர்களுக்கும் பிரசாதமாக அளிக்கப்படும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify