Logo of Tirunelveli Today

25 ஆண்டுகளுக்கு பின்னர் மருதூர் கால்வாயில் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு!

June 12, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கார் பருவ சாகுபடிக்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் முதல் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணியின் மருதூர் அணைக்கட்டில் இருந்து மருதூர் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

தாமிரபரணியின் முக்கிய பாசன கால்வாய்களான மருதூர் மேலக்கால், மருதூர் கீழக்கால் ஆகியவற்றில் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாதது மற்றும் மாராமத்து பணிகள் நடைபெற்றது ஆகிய காரணங்களால் 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார் பருவ சாகுபடிக்காக அனைத்து கால்வாய்களிலும்  திறக்கப்பட்டுள்ள நிலையில், மருதூர் மேலக்கால்வாய் மற்றும் கீழக்கால்வாய் ஆகியவற்றிலும் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் மருதூர் அணைக்கட்டில் உள்ள மருதவள்ளி  மற்றும் சோழவள்ளி அம்மன் கோவில்களில் பட்டியலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தி விவசாயம் செழிக்க வேண்டிக்கொண்டார்கள்!

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify