முருகனுக்கு பாமாலை -1
12 6 2022 ஞாயிற்றுக்கிழமை முருகப்பெருமானுக்கு பிறந்தநாள் விழாவை வைகாசி விசாகத்தில் கொண்டாடுகின்றோம். அதன் ஒரு சிறப்பு பார்வையாக முருகப் பெருமானுக்கு ஒரு பாமாலை நாம் தொடுத்து, பாடி, அகம் மகிழ்ந்து, அனுதினமும் அவன் பால்வதன முகம் நினைத்து பரவசம் காண்போம்.
பாலாபிஷேகத்தில் பால் மனம் கொண்டு தூய்மையாகி ..
நெய்யா அபிஷேகத்தில் இரு கை கொண்டு உமை வணங்கி மெய்யுருகி ..
தயிராபிஷேகத்தில். தீதெனவும் உருமாறி பண்பட்ட மனமாகி..
சந்தனாபிஷேகத்தில் பிணி தீர்ந்து தேகமோ திடமாகி ..
பழத்தாபிஷேகத்தில் வாழையடி வாழையாக குலம் தழைத்தாகி ..
தேனாபிஷேகத்தில் தெள்ளளவும் குறையாது வாழ்க்கை வளமாகி..
இளநீராபிஷேகத்தில் இளமையெனும்
இப்பிறவி சிறப்பாகி ..
விபூதிமணமாபிஷேத்தில்
முதுமையையும் ஆட்கொண்டு ஏற்பாகி..
பஞ்சாமிர்தாபிஷேகத்தில் கனிவான மனம் உமதோடு ஒன்றாகி..
நல்லெண்ணெய் அபிஷேகம் உமை நனைக்க குளிர்ந்த மனதோடு
நலமான வாழ்க்கையை
அருள்வாயே முருகா .. கந்தா
கதிர்வேலா …உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
நின்பாதமே சரணம் சரணம் சரணம்.