Logo of Tirunelveli Today

நெல்லையப்பர் கோவிலில் கோலாகலமாய் ஆவணி மூல திருவிழா

August 27, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. வருகின்ற 5-9-2022 அன்று கரூர் சித்தருக்கு காட்சி தரும் வைபவமும் நடைபெற இருக்கிறது. நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவிலில் வருடம் தோறும் ஆவணி மூலத் திருவிழா மிகவும் நடைபெற்று வருகிறது.

மானூரில் கரூர் சித்தருக்கு நெல்லையப்பரே வந்து காட்சி தந்த தினம் என்பதால் அன்றைய தினத்தில் ஆவணி மூல திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று நெல்லையப்பர் கோவிலில் கொடி மரத்திற்கு தீபாஆராதனை நடைபெற்றது. நேற்று காலை சுவாமி சன்னதியில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது . ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். திருவிழாவில் நான்காவது நாளான 29-8-2022 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடைபெற இருக்கிறது.

.3- 9- 2022 இரவு 9 மணிக்கு கரூர் சித்தர் மானூருக்கு புறப்பட்டு செல்கின்ற வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது .அடுத்து அனைத்து சுவாமிகளும் பல்லக்கு மற்றும் சப்பரங்களில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து மானூருக்கு புறப்பட்டு செல்வார்கள் .

ஏழு மணிக்கு கரூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாப விமோசன நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சிக்கும் நடைபெறுகிறது.

ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify