Logo of Tirunelveli Today

களக்காடு புலிகள் காப்பகத்தின் சார்பில் மஞ்சள் பை வழங்கும் விழா

June 10, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • களக்காடு புலிகள் காப்பகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
  • சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கிய வனத்துறையினர்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் மாற்ற அரசு பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீண்டும் மஞ்சள் பை இயக்க திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது.

இந்த இயக்கத்தின் துவக்க விழாவிலேயே, மஞ்சள் பையை அவமானமாக யாரும் கருத வேண்டாம். 'சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை' என முதலமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து உலக சுற்றுச்சூழல் தினம் திருநெல்வேலி களக்காடு புலிகள் காப்பகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.

களக்காடு தலையணை சாலை, சோதனை சாவடி, சிறுவர் பூங்கா ஆற்றுப்பகுதியில் மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. .

பின்னர் சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டு , பின்னர் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வனத்துறையினர் தலையணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக மஞ்சள் பைகளை வழங்கினர்.

மாணவ மாணவியர் வனத்துறை ஊழியர்கள் தன்னார்வலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு சுற்றுச்சூழல் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மாசற்ற மனம் இறைவன் ஏற்பான் அதுபோல் மாசற்ற பொருள் பயன்படுத்த இயற்கை அதை ஏற்கும். இறைவனும் இயற்கையும் என்றும் ஆசி வழங்க நமக்கு கிடைத்த வாழ்க்கை என்றும் வளம் பெறட்டும் என்று அனைவரும் இசைந்து ஒத்துழைப்போம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்போம்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify